சென்னை: இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு அளித்தார். வரும் 14ம் தேதி அம்பேத்கரின் 134வது பிறந்தநாள். தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அம்பேத்கர் பிறந்தநாள் விழாக்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுத்து, அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என மனுவில் கூறியுள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று சட்டம் ஒழுங்கை சீராக வைத்திருக்க வேண்டும். தேர்தல் விதியை கணக்கில் காட்டி கட்டுப்பாடு என்ற பெயரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதை காவல்துறை தடுக்க கூடாது’’ என்றார்.