சென்னை: தேர்தல் பத்திரம் என்ற ரகசிய சாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனை அல்ல…பூதம் என சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் 22 நிறுவனங்கள் தலா ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளன. அமலாக்கத்துறையிடம் சிக்கிய ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.1368 கோடி நன்கொடை வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.