திருவள்ளூர்: தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை பயன்படுத்திய திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன்.பாலகணபதி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.நேற்று முன்தினம் அவர் மெய்யூர் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற போது அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்பதற்காக தாமரை கொடியும், தேசிய கொடியும் கொடுத்து அவரை வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ செய்திகளில் ஒளிபரப்ப பட்டதால் அந்த பகுதியின் குறுவட்ட ஆய்வாளர் பாலாஜி என்பவர் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியம்பாளையம் போலீசார் மக்கள் பிரதிநிதி சட்டம் மீறல் 123/11கீழ் பாலகணபதி மற்றும் மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன், பூண்டி ஒன்றிய தலைவர் சாந்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இவர் தேர்தல் விதிமுறைகளில் ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.