Friday, May 3, 2024
Home » ஆந்திராவில் பாதயாத்திரையில் சென்ற சந்திரபாபு மகன் மீது முட்டை வீச்சு: ஒய்எஸ்ஆர் காங். நிர்வாகிகள் 2 பேரிடம் விசாரணை

ஆந்திராவில் பாதயாத்திரையில் சென்ற சந்திரபாபு மகன் மீது முட்டை வீச்சு: ஒய்எஸ்ஆர் காங். நிர்வாகிகள் 2 பேரிடம் விசாரணை

by Ranjith

திருமலை: ஆந்திராவில் பாத யாத்திரையில் ஈடுபட்ட சந்திரபாபு மகன் மீது முட்டை வீசப்பட்டது. இதுதொடர்பாக ஒய்எஸ்ஆர் காங். நிர்வாகிகள் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு. இவரது மகன் லோகேஷ். இவர் அக்கட்சியின் எம்எல்சியாக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி லோகேஷ் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்றுமுன்தினம் 114வது நாளாக கடப்பா மாவட்டம் பொதட்டூரில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

அப்போது அவருடன் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சியினர், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சித்தப்பா விவேகானந்தரெட்டியின் கொலை தொடர்பான பதாகைகளை ஏந்தி வந்தனர். இதனைக்கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தடுத்தனர். அந்த பதாகையை அகற்றும்படி கூறினர். இதனால் லோகேஷ் உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாக மாறியது. ஆனாலும் அந்த பதாகையை லோகேஷ் ஏந்திக்கொண்டு போலீசார் எச்சரிக்கையை மீறி செல்ல முயன்றார்.

பின்னர் அதேபகுதியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய லோகேஷ்,ஜெகன்மோகன் குறித்து கடுமையாக விமர்சித்தார். பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது அவர் மீது சரமாரி முட்ைட வீசப்பட்டது. அந்த முட்டைகள் லோகேஷின் அருகே இருந்த பாதுகாப்பு அதிகாரி மீது விழுந்து உடைந்தது. இதைக்கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் உடனடியாக அங்கிருந்த 2 பேரை சுற்றிவளைத்து பிடித்து சரமாரி தாக்கினர். இதைக்கண்ட போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை மீட்டனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என்பதும், முதல்வர் குறித்து தவறாக பேசியதால் முட்டை வீசியதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். லோகேஷ் பாத யாத்திரையின் போது போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் தாக்குதல் நடந்ததால், போலீசார் பாதுகாப்பில் அலட்சியமே காரணம் என தெலுங்கு தேசம் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

ten + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi