தூத்துக்குடி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தூத்துக்குடியில் திருமண விழாவில் பங்கேற்க வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாஜவால் அனைத்து பலனையும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அடைந்து விட்டு, தற்போது கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது மிகப்பெரிய துரோகம் ஆகும். துரோகத்தின் மொத்த உருவமே எடப்பாடி பழனிசாமிதான். இது அவரின் இயல்பான குணமாகும். அவர் முதல்வராக வருவதற்கும், அதிமுக ஆட்சியை காப்பாற்றியவர்களுக்கும் துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. தற்போது பாஜவுக்கு துரோகம் செய்துள்ளார்’ என்றார்.