பெரம்பூர்: கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2ம் தேதி, வலி நிவாரணி மாத்திரைகளை கூரியர் மூலம் வட மாநிலத்தில் இருந்து ஒரு கும்பல் வரவழைத்தது. பின்னர், அதனை வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் போதைக்காக விற்பனை செய்துள்ளது. இது தொடர்பாக, ரஞ்சித் குமார் (27), அமுதவல்லி (25), அருண் (22), அருள்ராஜ் (23) ஆகிய 4 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த உசேன் பீ (23) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். நேற்று முன்தினம் கொடுங்கையூர் போலீசார் அவரை கொடுங்கையூர் எழில்நகர் பகுதியில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.