சென்னை: சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி செலுத்தி இளைஞர் இறந்த விவகாரத்தில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 26ம் தேதி தனது நண்பர்களுடன் போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து பயன்படுத்தியுள்ளார் கஞ்சாமணி என்ற தீனதயாளன். திடீரென மயங்கி விழுந்த தீனதயாளன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.