டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்த நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சூரியமூர்த்தி மனு அளித்ததை தொடர்ந்து அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் கடந்த மாதம் 28-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
தான் அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள வரும் 25-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. சூரியமூர்த்தி வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சூரியமூர்த்தி மனு மீது பதில் அளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.