சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மார்ச் 10 அன்று 2 வெவ்வேறு சம்பவங்களில் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.