புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.6.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலான தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்ளிட்ட நேரடி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக.10ம் தேதி வரையிலான நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.6.53 லட்சம் கோடி. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது இது 15.73 சதவீதம் அதிகம். அதே போல் நிகர நேரடி வரி வசூல் ரூ.5.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.