டெல்லி: டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். சிபிஐ, அமலாக்கத்துறை, ஐ.டி., என்.ஐ.ஏ. போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திரிணாமுல் குற்றச்சாட்டியுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.