ராய்பூர்: பல தசாப்தங்களாக ஏழைகளின் தேவைகளை காங்கிரஸ் கவனிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்பதுதான் நாட்டின் அடையாளமாக இருந்தது. 10 ஆண்டு பாஜக ஆட்சியில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.