Saturday, May 18, 2024
Home » டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப பதிவு 12ம் தேதி வரை நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப பதிவு 12ம் தேதி வரை நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: வரும் 2024-25-ம் கல்வியாண்டுக்கான டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் டான்செட் செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணாபல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

அதேபோல், அண்ணாபல்கலைக்கழக வளாக கல்லூரிகள், மண்டல கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர பொது இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும். 2024-25-ம் கல்வியாண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 9ம் தேதியும், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் 10ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த தேர்வானது, தமிழகத்தின் 14 நகரங்களில் நடக்கும். டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 7ம் தேதி (நேற்று) வரை நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்ப பதிவிற்கான தேதியை நீட்டித்து அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக டான்செட் செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எம்.சி.ஏ, எம்.பி.ஏ., முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., முதுநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு வருகிற 12ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் இல்லை என்ற போதிலும், டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

19 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi