மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குத்தாலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலத்தில் முறைகேடு நடந்ததாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மறைமுக ஏல முறையில் பருத்திக்கு விலை நிர்ணயம் செய்தனர். குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 7 ஆயிரத்து 80 ரூபாயும், குறைந்தபட்சம் 5 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் ஏலம் கேட்கப்பட்டது.
வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு ஏலம் எடுப்பதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.