நீலகிரி: நீலகிரியில் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி தினந்தோறும் 2 முறை மலை ரயிலானது இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று இயக்கப்பட மலை ரயில் கிட்டத்தட்ட 150 பயணிகள் பயணித்தனர்.
அவர்கள் பயணித்த மலை ரயிலின் கடைசி பெட்டியானது குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட 200 மீட்டர் தொலைவில் தண்டவாளத்திலிருந்து வெளியேறியது. உடனடியாக மலை ரயிலானது நிறுத்தப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவையானது இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இருந்து வெளியேறிய பெட்டியை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாப்பயணிகள் பொறுத்தவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.