கரூர்: குளித்தலை அருகே வீரணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கோயில் திருவிழாவுக்கு வந்த ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞரை மற்றொரு சமூகத்தினர் தடுத்ததாக புகார் எழுந்தது. பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.