கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார். அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார். திமுக கலை இலக்கிய அணி துணை தலைவர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் புகார் அளித்துள்ளார்.