சென்னை: பதற்றமான சூழல் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களுக்கான ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட மாட்டாது என்று அறிவித்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளில் செல்ல பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பயணிகளுக்கு உதவியாக கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.