சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயிற்சி முகாமை சென்னை மாநராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். சென்னை மாநராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். ரேசன் கடைகளுக்கு ஏற்றவாறு முகாம்களின் எண்ணிக்கை மாறுபடும். 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஒரு முகாம் என்ற அளவில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.