திருச்சி: நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். தஞ்சை, திருச்சியில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்சியில் முதல்வர் செல்லும் வழிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.