சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மெரினாவில் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் திறந்து வைத்தார். நினைவிடத்தில் கலைஞர் அமர்ந்து எழுதுவது போன்று வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அண்ணா நினைவிடத்துக்கு உள்ளே இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.