சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். நினைவிட திறப்பு விழாவில் கி.வீரமணி, வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு. சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து பங்கேற்றுள்ளனர்.