Saturday, May 18, 2024
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுக நிர்வாகிகள் உள்பட 500 பேர் திமுகவில் இணைந்தனர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுக நிர்வாகிகள் உள்பட 500 பேர் திமுகவில் இணைந்தனர்

by Karthik Yash

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ விடி.கலைச்செல்வன், முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன் தலைமையில் அதிமுக, அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று, அதிமுகவைச் சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகர முன்னாள் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ விடி.கலைச்செல்வன் மற்றும் முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன் தலைமையில் அதிமுக, அமமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பிரதிநிதி, கிளைச் செயலாளர்கள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வெ.கணேசன், செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உடனிருந்தனர்.

திமுகவில் இணைந்தவர்கள் விவரம்: அதிமுகவை சேர்ந்த விருத்தாசலம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் எஸ்.சுதாகர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் சின்கண்டியாங்குப்பம், ஜீ.வீரபாண்டியன், சித்தூர் எஸ்.துரைசாமி, காட்டுபரூர் பி.அர்ச்சுனன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சாத்தியம் எஸ்.சின்னசாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வி.பஞ்சாட்சரம், நல்லூர் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி எம்.தண்டபாணி, சாத்துக்குடல் கீழ்பாதி கிளைச் செயலாளர் ஆர்.கோவிந்தசாமி, பூவனூர் கிளைச் செயலாளர் கே.அருண்குமார், வரம்பனூர் கிளைச் செயலாளர் டி.செந்தில், சின்னகண்டியன்குப்பம் கிளைச் செயலாளர் சி.முருகானந்தம், கர்நத்தம் கிளைச் செயலாளர் ரமேஷ், மங்கலம் பேட்டை பேரூர் சிறுபான்மை பிரிவு எம்.சையதுரசூல், மங்கலம் பேட்டை பேரூர் முன்னாள் சிறுபான்மை செயலாளர் ஆர்.மன்சூர்அலி, விருததாசலம் நகரச் செயலாளர் மார்க்கட் டி.நடராஜன், எஸ்.பிரகாஷ்- அமமுக கட்சியைச் சேர்ந்த மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சோழன் எம்.எஸ்.சம்சுதீன், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் டி.பாபு, நல்லூர் ஒன்றியச் செயலாளர் ஏ.ரமேஷ், மங்கலம பேட்டை நகர முன்னாள் நகரச் செயலாளர் கே.செல்வராஜ், முன்னாள் அவைத்தலைவர் மங்கலம்பேட்டை பேரூர் பி.கார்த்தி, நல்லூர் கிளைச் செயலாளர் சி.மணிகண்டன், குப்பநத்தம் ஊராட்சி செயலாளர் ஜி.அன்பழகன், விருத்தாசலம் ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் ரவி, மங்கலம்பேட்டை பேரூராட்சி 8வது வார்டு செயலாளர் சைய்யது நிசார் மற்றும் ஓபிஎஸ் அணி விருத்தாசலம் நகர துணைச் செயலாளர் கே.சதிஷ்குமார் மற்றும் ஜி.ரமேஷ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

You may also like

Leave a Comment

4 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi