Tuesday, May 21, 2024
Home » முதல்வர் எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் தக்காளி விலை குறைவு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி

முதல்வர் எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் தக்காளி விலை குறைவு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி

by Suresh

திருச்சி: திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள கேர் கல்லூரியில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை சங்கமம் 2023 என்ற பெயரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதையொட்டி கேர் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைதொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: வடமாநிலங்களில் அதிகளவு மழை பெய்ததன் காரணமாக வரத்து குறைந்து தக்காளி விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு நடவடிக்கையால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் விலை குறைவாக உள்ளது என்றார்.

இதைதொடர்ந்து ராம்ஜிநகரில் வரும் 26ம் தேதி நடைபெறும் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் பயிற்சி பாசறை கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டனர்.

You may also like

Leave a Comment

13 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi