சென்னை : அதிகப்படியான நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”கடும் நெருக்கடியிலும் ரூ.100 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடைபெற்ற பணிகளை பட்டியலிட ஒருநாள் போதாது,” இவ்வாறு பேசினார்.