சென்னை : தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதல்வர், தமிழகத்திற்கு வினாடிக்கு 12,500 கன அடி நீரை கர்நாடக விடுவிக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று கூறினார்.