சென்னை: தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அமுல் நிறுவனம் இதுநாள் வரை தங்களது தயாரிப்புகளை மட்டுமே விற்று வந்த நிலையில் தற்போது பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பியுள்ளார். அமுல் நிறுவனத்தின் செயல் பால், பால் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு நிறுவங்களிடையே ஆரோக்கியமற்றது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.