சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண வரவேற்பு மேடையில் நடனமாடி கொண்டிருந்த திலீப் என்ற பொறியாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பலோட் மாவட்டத்தின் தல்லி- ராஜரா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மேடையில் மனமக்களுடன் பஞ்சாபி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த திலீப் ரௌஜ்கர் என்பவர் திடீரென நெஞ்சை பிடித்து கீழே விழுந்தார்.
பின்னர், உறவினர்கள் ஆம்புலன்ஸில் திலீப்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இறந்தவர் பலோட் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் ரௌஜ்கர் என்பதும், அவர் மாநிலத்தில் உள்ள பிலாய் ஸ்டீல் ஆலையில் பொறியாளராகப் பணியாற்றியவர் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தில் அனைவரும் சோகத்தால் ஆழ்ந்துள்ளனர். நடனமாடியபோது உடலுக்கு அதிக ரத்தம் தேவைப்பட்டதாகவும், இதயத்துடிப்பு அதிகரித்ததன் காரணமாகவும், ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.