சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை அதன் இணையதளத்தில் உடனே பதிவேற்ற சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் தபால் பெட்டி நிறுத்தத்தை நீக்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தபால் பெட்டி நிறுத்தத்தை நீக்கிவிட்டு, முராரி மருத்துவமனை நிறுத்தத்தை அமைக்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. திட்டம் மாற்றப்பட்டதை எதிர்த்து மாதவரம் கே.கே.ஆர். நகர் குடியிருப்பு வாரிய நலச்சங்க செயலாளர் லூர்துராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.