Sunday, May 26, 2024
Home » பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

by Suresh

தர்மஷாலா: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது.168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் பஞ்சாப் – சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்யா ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.

ரஹானே 9 ரன்கள் எடுத்திருந்தபோது அர்ஷ்தீப் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல், ருதுராஜ் ஜோடி அதிரடியாக விளையாடியது. மிட்செல் 30 ரன்களும், ருதுராஜ் 32 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த ஷிவம் துபே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

மொயின் அலி 17 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 43 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 11 ரன்களும், ஷர்துல் தாகூர் 17 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி டக் அவுட் ஆனார். ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் களம் இறங்கிய சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்தில் போல்டாகி ரசிகர்களின் தலையில் துண்டை போட்டார்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ 7, ரூசே 0, சாம் கரன் 7, ஜிதேஷ் சர்மா 0, அசுதோஷ் சர்மா 3 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களும், ஷஷாங்க் சிங் 27 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ராகுல் சாஹர் 16 ரன்னும், ஹர்ப்ரீத் பிரார் 17 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பாங்காக் அணி தோல்வியடைந்தது.

You may also like

Leave a Comment

three − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi