சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நேற்று சாலையில் சென்ற 5 பேரை மாடு முட்டிய விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாட்டின் உரிமையாளர் தேவராஜ் மீது இரு பிரிவுகளின் கீழ் ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என தெரிந்து கால்நடைகளை முறையாக பராமரிக்காத பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.