சென்னை: சென்னை போரூரில் இருந்து பூவிருந்தவல்லி நோக்கி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போரூர், ஐயப்பன்தாங்கலில் இருந்து பூவிருந்தவல்லி செல்ல ஒரு மணி நேரம் ஆவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் பணி, சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.