சென்னை: சென்னை துரைப்பாக்கம் பகுதியில் போலி கால் சென்டர் நடத்தி பண மோசடி செய்த புகாரில் முகமது ஜாவித் என்பவர் கைது செய்யப்பட்டார். இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. யு.பி.ஐ. பரிவர்த்தனை மூலம் நடந்த பணப் பரிமாற்ற விவரங்களைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். தொலைபேசி எண் மூலம் மோசடி நபரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து சென்னை போலீஸ் கைது செய்தது.