டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதிகள் பி.ஆர்.சுவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் காவிரி வழக்கு விசாரணை நடைபெறு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தை தொடங்கினார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.