டெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று நடக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 19ல் நடந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜனவரி முதல் 1,030 கனஅடி நீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது.