டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கோடைக்கால நீர்ப்பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.