காசினி: பிரம்மமூர்த்தகுமாரன் மாரீசி மகன் காசிபர். இவன் தட்சனின் 13 பெண்களை மணந்தான். அவர்கள் மூலம் ஊர்வன, பறப்பன, தேவர், மனிதர், இராட்சதரை படைத்து உலகை மேம்படுத்தியதால் பூமிக்கு காசினி என்று பெயர்.
சித்தீஸ்வரம்: காஞ்சி காமராஜ் சாலை, கிழக்கு கருவறை 8 அடி உயரம் 12 அடி சுற்றளவு பெரிய லிங்கம் ஆவுடையார் இல்லை ருத்திர பாகம் சுயம்புலிங்கம். இது இடிகல்லால் ஆனது.
தேர் வடிவ ஸ்ரீவிமானம்: கடம்பூர், குடந்தை நாத நாதசுவாமி (நடராஜர் சந்நதி) சென்னை நங்கநல்லூர் (அர்த்தநாரீஸ்வரர்) ஆலயம் துர்க்கை சந்நதி).
ரோமசரிஷி: புகண்டரிஷி மகன் வைத்திய நூல் எழுதினார். உடலில் 31/2 கோடி முடி உள்ளது. 1 முடி உதிர்ந்தால் 1 பிரம்மன் ஆயுள் முடியும். திருஒற்றியூர், சீர்காழி, திருவிடைமருதூரில் வழிபட்டார்.
திருமழபாடி: வஸ்ரதம் பேசுவரர் ஆலயம் சோமாஸ் கந்தருக்கு 2 தனி சந்நதி உள்ளன. 1-ல் பெரிய கருங்கல் திருமேனியாக பெரிய பிரபையுடன் ஒற்றைகல்லால் செய்யப்பட்டுள்ளது. (சோழமண்டலத்தில் வேறு இல்லை).
திருவீழிமிழலை: ஈசன் சக்கரதானர். சக்கிரதியாகர் வலது பாதத்தில் சக்கர ரேகைகளும், மேற்புரத்தில் திருமால் இடந்து இட்ட திருக்கண் உள்ளது. திருவதிகையிலும் திருமால் சிவனை ஆராதித்து சக்கராயுதம் பெற்றார்-புராணம்.
மண்டப தூணில் கதை: காஞ்சி ஏகாம்பரர் 16 கால் தூணில் மும்புரம் எரித்தல், எமனை உதைத்தால், யானையை உரித்தல் கதை, தாராசுரம்-ஐராவதேஸ்வரர், முருகன் திருமணம், மார்க்கண்டேயன் கதை, தாருகாவனத்து ரிஷிகள் கர்வ பங்கம் கதை.
ஸ்ரீபலி: நாள்தோறும் நண்பகலிலும் இரவிலும் சிவபெருமான் உமாதேவியருடன் எழுந்தருளி பத்து திசை பாலகர்க்கும் அவர்தம் கடமையை உணர்த்தி உலகிற்குப் படியளக்கும் நிகழ்ச்சிக்கு ஸ்ரீபலி என்று பெயர், எழுந்தருளும் நாயகர் ஸ்ரீபலிநாயகர் (அ) சந்திரசேகரர்.
இந்திரஞாலத்தேர்: சிவன் சூரபத்மனுக்கு அளிக்கப்பட்ட தேர். இது மாயம்வல்லது நினைத்தபடி இயங்குவது. போரில் அவுணர்களை உயிர்ப்பிக்க அமுத சீதமந்திரமலையைக் கொண்டு வந்து உயிரூட்டியது. முருகன் இத்தேரைக் கைப்பற்றி ஏற்றுக்கொண்டார்.
திருமறைக்காடு: 4 வேதங்களும் மனித வடிவுடன் சிவனை துதித்து வழிபட்டது. வழிபட்டபின் கதவை மூடி சென்றன. திருநாவுக்கரசு அதை பாடி திறந்தும் சம்பந்தர் மூடவும் செய்தார். காஞ்சி ஏகாம்பரர் ஆலய மாமரமும், குற்றால பலாமரமும் வேத வடிவம்.
தொகுப்பு: அருள்ஜோதி