Saturday, May 18, 2024
Home » மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

by Porselvi

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் திருமதி. ஷீபா வாசி (தி.மு.க – வார்டு 122), திரு.நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் (காங்கிரஸ் – வார்டு 165) ஆகியோர் மறைவினையொட்டி அவர்களது குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையினை அவர்களது குடும்பத்தினரிடம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று (19.05.2023) வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள உறுப்பினர்கள் மறைவிற்கு குடும்ப நிவாரண நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கி வந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை அறிவிப்பில், பொறுப்பில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு மேயர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மறைந்த திருமதி. ஷீபா வாசி, திரு.நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகிய இரண்டு மாமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 இலட்சம் குடும்ப பாதுகாப்பு நிதிக்கான காசோலைகள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாண்புமிகு மேயர் திருமதி. ஆர்.பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் மரு.ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மாமன்ற ஆளும் கட்சித் தலைவர் திரு.ஆர்.இராமலிங்கம், மாமன்ற செயலாளர் திரு.மகேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi