சென்னை : காலை சிற்றுண்டி திட்டத்தை கனடா பின்பற்றுவது முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணா பிறந்தநாளான 2022 செப்.15-ல் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்றும் காலை உணவு திட்டம் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் தினமும் பயனடைந்து வருகின்றனர் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.