சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்திய ஏசிடிசி நிறுவனம் 20,000 இருக்கைகளுக்கு மட்டுமே காவல்துறையில் அனுமதி பெற்றுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 400 பாதுகாவலர்களையும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக ஏசிடிசி நிறுவனம் காவல்துறைக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது