ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் தொகுதி பாஜ எம்.எல்.ஏ ஷோபாராணி குஷ்வாஹா தனது ஆதரவாளர்கள் 3 பேருடன் நேற்று காங்கிரசில் இணைந்தார். ராஜஸ்தானில் உள்ள ஜூன்ஜுனு மாவட்டம் அரதாவதாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஷோபாராணி தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூனில் நடந்த ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக வாக்களித்ததால் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார். ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த ஷோபாராணிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அதனால் அவர் தன் ஆதரவாளர்களுடன் சென்று காங்கிரசில் இணைந்தார்.