சென்னை: பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நெல்லை தொகுதியில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதிக்கு பாஜக வேட்பாளரை அறிவித்ததால் த.மா.கா. அதிர்ச்சி அடைந்தது. நெல்லையில் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கியிருந்தார் நயினார் நாகேந்திரன்.