Monday, May 27, 2024
Home » பூந்தமல்லி அருகே பைக்குகள் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

பூந்தமல்லி அருகே பைக்குகள் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

by Ranjith

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (28). தனியார் ஊழியர். இவர் தனது வீட்டின் அருகே, குடிசை வீடு அமைத்து, தனது குடும்பத்தினரின் 5க்கும் மேற்பட்ட டு வீலர்களை நிறுத்தி இருந்தார். இந்நிலையில், 2 பைக்குகள் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதை பார்த்ததும் வெங்கடேசனும் அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து, இருசக்கர வாகனங்களில் பரவியிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

இதற்குள், அந்த 2 இருசக்கர வாகனங்களும் முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டன. தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவினால் 2 பைக்குகள் தீப்பிடித்ததா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi