சிதம்பரம்: இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்றுமுன்தினம் காலை புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று விட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தரிசம் செய்தார். பின்னர் கோயில் வருகையாளர் பதிவேட்டில் ெஜகதீப் தன்கர், துணை தலைவர், பாரத் என கையொப்பமிட்டுள்ளார். இந்திய கூட்டணி உருவான பிறகு இந்தியாவை பாரத் என்று ஒன்றிய பாஜ அரசு அழைக்க தொடங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்பின் இந்த சர்ச்சை சற்று ஓய்ந்தது. இந்நிலையில், துணை ஜனாதிபதி ெஜகதீப் தன்கர், இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று கையெழுத்திட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.