தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெரம்பூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் காலை வேளைகளில் சென்ட்ரலில் இருந்து அதிகளவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுபோல் மின்சார ரயிலும் அதிகளவு இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு தலை துண்டித்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தகவலறிந்ததும் சென்ட்ரல் ரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து, வாலிபலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தபோது, புளியந்தோப்பு கன்னிகாபுரம் சத்தியவாணி முத்துநகரை சேர்ந்த கீம்சிங் (22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.