சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகர் பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: முதலீடுகள் தொடர்பாக தமிழகத்திற்கு என்ன ஒத்துழைப்பு வேண்டுமோ அதை வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அறிவிக்க வேண்டிய அதிகாரம் பாஜ மேலிடத்துக்கு தான் உண்டு. அதுகுறித்து அறிவிக்க எனக்கு அதிகாரம் இல்லை. பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்டு வருபவர்கள் எங்களுடன் பயணிக்கின்றனர் என்றார்.