Wednesday, September 27, 2023
Home » அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிலம் அளித்தோருக்கு இழப்பீடு தரவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிலம் அளித்தோருக்கு இழப்பீடு தரவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

by Ranjith

சென்னை: அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : அத்திக்கடவு-அவினாசி திட்டம் கடந்த ஆட்சி காலத்தில் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை தற்போது அரசு மிகுந்த காலதாமதத்தோடு நிறைவேற்றி வருகிறது. மேலும் தமிழக அரசு இத்திட்டத்துக்கு நிலம் அளித்தவர்கள் மற்றும் குழாய் பதிக்க நிலம் அளித்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையையும் அளிக்கவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக பயிர் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். ஆகவே தமிழக அரசு அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நஷ்ட ஈட்டை உடனடியாக வழங்க வேண்டும். திட்டம் முழுமையாக நிறைவேற, உரியபணியை விரைந்து துவக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?