டெல்லி: ஆசிய பாரா விளையாட்டில் 73 பதக்கங்களை இந்தியா பெற்று சாதனை படைத்த நிலையில் பிரதமர் மோடி பெருமிதம் அடைந்துள்ளார். வரலாற்றில் தங்களது பெயர்களை பொறித்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள் எனவும் அவர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, திறமையால் வரலாற்று சாதனை சாத்தியமாகியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.