Saturday, May 18, 2024
Home » அரும்பு மொழி!

அரும்பு மொழி!

by Porselvi
Published: Last Updated on

ஆட்டிசம் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் செயலிதான் ‘அரும்பு மொழி’. ஆட்டிசம் குழந்தைகளின் பெரிய பிரச்னையே அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் தேவை என்ன என்பதை சொல்லத் தெரியாமல் தடுமாறுவதுதான். அதற்கான செயலிதான் இந்த அரும்பு மொழி. இந்தச் செயலியை எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கேற்ப எடிட் செய்து பயன்படுத்தலாம். உங்கள் குரலில் நீங்களே ரெக்கார்ட் செய்து பயன்படுத்தலாம் என்பதே இந்தச் செயலியின் சிறப்பம்சம். உதாரணத்திற்கு உங்கள் குழந்தை சாப்பிடும் ஒரு புகைப்படத்தை இணைத்து நீங்களே ‘எனக்குப் பசிக்கிது’ என உங்கள் குரலில் பதிவு செய்து வைத்து குழந்தையிடம் கொடுத்துவிடலாம். ஒருவேளை குழந்தைக்குப் பசி என்றால் அந்தப் புகைப்படத்தைத் தொட்டால் போதும். ஏற்கனவே நீங்கள் பதிந்த குரல் அதில் கேட்கும். இதுபோல் கடற்கரைக்குச் செல்ல வேண்டும், தண்ணீர் வேண்டும், விளையாடலாமா என அவர்கள் நினைப்பதை அதில் புகைப்படமாகவும் உடன் குரல்கள் இணைத்தும் கொடுக்கலாம். பெரும்பாலும் ஆட்டிசம் குழந்தைகள் தாங்கள் நினைப்பதை சொல்லத் தெரியாமல்தான் கத்துவதும், அழுவதும், அடம் பிடிப்பதும் செய்வர். அதற்கு தீர்வாக இந்தச் செயலி செயல்படும். தங்களின் குழந்தையும் ஆட்டிசம் குழந்தை என்பதாலும், தங்களைப் போலவே இருக்கும் மற்ற பெற்றோர்களுக்கு தேவையாக இருக்கட்டும் எனவும் இதனை எழுத்தாளர் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கணவர் மற்றும் எழுத்தாளர் யெஸ். பாலபாரதி இணைந்து வடிவமைத்துள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரில் இந்தச் செயலி இலவசமாகவே பயன்பாட்டில் உள்ளது.

ஆஹா தக்காளி!

தக்காளியில் வைட்டமின் ஏ, பி, கே சத்துக்கள் கனிமங்கள், இரும்பு சத்து, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் பல நன்மை செய்கிறது.தக்காளியில் உள்ள லேகோபீன் புற்றுநோய் செல்கள், குறிப்பாக புரோஸ்டேட், வயிறு மற்றும் பெருங்குடல் புற்று நோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது.நூறு கிராம் தக்காளியில் 110 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. தக்காளி சாப்பிடும் வரை எலும்புகள் பலமாக வலுவாக இருக்கும்.சொிமான அமைப்பு மற்றும் கல்லீரலை மேம்படுத்த உதவுகிறது. தக்காளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலையும் தடுக்கிறது.தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.நன்கு பழுத்த தக்காளி இரண்டை எடுத்து சிறிது சிறிதாக அரிந்து மிக்ஸியில் போட்டு ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகினால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும்.தொற்று நோய்களைத் தவிர்க்கும்.

  • ஆர்.ஜெயலெட்சுமி.

You may also like

Leave a Comment

fourteen + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi