வான்டா: பின்லாந்தில் நடக்கும் ஆர்க்டிக் ஓபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்ற இந்தியர்களில் பி.வி.சிந்து மட்டுமே அரையிறுதி வரை முன்னேறினார். பல போட்டிகளுக்கு பிறகு மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சிந்து களம் இறங்கியதால் இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதியில் பி.வி.சிந்து (28 வயது, 13வது ரேங்க்), சீனாவின் ஜி யி வாங் (23வயது, 11வது ரேங்க்) மோதினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஆட்டத்தை வாங் 21-12, 11-21, 21-7 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார்.